கவிதை தொகுப்பு

1. என்னை மறந்து விடு
    என்று சொல்லாதே!
   மறந்து கொண்டு தான்
   இருக்கிறேன் என்னை!


2.  பேச மொழி தெரிந்தும்
     பேச முடியவில்லை
     அருகில் நீ இருப்பதால்!

3.  உறுதி கொண்டேன்
    உன்னை கண்கள் காண
    கூடாது என்று
    எதிரில்  நீ!

4.  பரவசமடைந்தேன்!
     உன்னை கண்டதால்.
     பரிதாபமானேன்
    உன் தந்தையை கண்டதால்.

Comments

Post a Comment